"தேன்கூட்டில்" ஒரு தேனீயானேன்!
ஜூன் 15 அன்று, 'இன்றைய வலைப்பதிவராக' தேன்கூட்டில் என்னைப் பற்றிய அறிமுகமும், என் வலைப்பதிவு குறித்த சிறு விமர்சனமும் வெளி வந்தன. முதற்கண், தேன்கூடு ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி !
இதுவரை என் வலைப்பதிவு பற்றி வலையில் வெளிவந்த ஒரு சில குறிப்புகளிலிருந்து இது வித்தியாசமாக அமைந்த ஒன்று ! எனது பல பதிவுகளை வாசித்து, அதன் பின் சுவாரசியமாக எழுதப்பட்ட நல்லதொரு விமர்சனமாக இதைக் கருதுகிறேன். இதனால் என் எழுத்துக்களுக்கு மேலும் பல வாசகர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன். 'தேன்கூட்டில்' ஒரே ஒரு நாள் 'ராணி தேனீ' ஆனது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் :)
தேன்கூட்டில் வந்த விமர்சனம் கீழே:
கோவை GCT கல்லூரியில் படித்து சென்னையில் பணிபுரியும் இவர், கவிதைகள்,பாசுரங்கள், அரசியல், கிரிக்கெட், திரைப்பாடல்கள், கதைகள் என்று பல துறைகளையும் தொடுபவர்.
[ஆஹா, ஆல்ரவுண்டர் தகுதியை கொடுத்து, பொறுப்பை அதிகம் ஆக்கி விட்டீர்கள் !]
இவரது இடுகைகளில் 'சிறுவயது சிந்தனைகள்', 'பல்லவியும் சரணமும்' போன்றவைஅதிகம் சிலாகிக்கப்பட்டவை.
[இவை எனக்கு நிறைய வாசகர்களை பெற்றுத் தந்தவை, இவற்றால் தான் முதலில் அறியப்பட்டேன்.]
வலைப்பதிவர் தேசிகனால் [இவர் சாதாரணமான ஆளா என்ன ?] அறிமுகப்படுத்தப்பட்ட 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வும் இழையோடும், ஆத்மார்த்தமான நேசமும் தென்படும்.
[நன்றி]
சுஜாதாவின்எழுத்துக்களை ஆழமாக ரசிப்பவர்.
[ஐயோ, ரவி ஸ்ரீநிவாஸோடு சண்டை வரும் அபாயம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே ;-)]
அவ்வப்போது இவரது தோழர்களுக்கு பகிரங்ககடிதம் எழுதி நினைவலைகளில் மூழ்குபவர்.
[என் ஆத்ம நண்பன் குறித்த பதிவுகளை நினைவு கூர்ந்ததற்கு ஸ்பெஷல் நன்றி!]
வலைப்பதிவுகள் தவிர, திண்ணை, தமிழோவியம்,
அந்திமழை போன்ற இணைய பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வலைப்பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்றுவரும் 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் நகைச்சுவை பதிவுகள் பலராலும் ரசிக்கப்படுபவை. இவரது பதிவினைப் பற்றி அவரே எழுதிய இடுகை இது.
[சுயதம்பட்டத்தை சுட்டிக் காட்டி விட்டீர்கள் :)]
என்றென்றும் அன்புடன்,
பாலா
3 மறுமொழிகள்:
வாழ்த்துக்கள் பாலா..
hey, kadaseela, un per pathrikkai alavula vandhuduthaa! valaipathrikkai aanaal enna! konja naaL aaLai kaaNum, kalyaNathla karandi pidichindrinthennu nethikki thaan keLvippatten?
Yaar theriyala? Naan thaan da Nari! "Dr. Narayanan Chakravarthy"! Eppadi, unnai valaiyulagathla thedi kandu pidichitten paathiyaa! Anga irukkache thaan etho theechuvar pottuttappola irukku. Ippo naan 2 maasam Germany vandirukken... athaan, un valaippadhippellam padikkalamnu partha, thideernu namma aaLu celebrity'aa aayndrikkaar! Congratulations!!
Aathla ellarayum vijaarichathaa sollu!
Anonymous,
நன்றி !
டாக்டர் சக்ரவர்த்தி,
What a surprise :) I am honoured by your visit !!!
ஜெர்மனியில் என்ன பண்றீங்க ? கொஞ்ச நாள் முன்னால் வேதா சித்தி போன் பண்ணீயிருந்தாகள்.
//kalyaNathla karandi pidichindrinthennu nethikki thaan keLvippatten?
//
என்ன சொல்ல வரேன்னு சுத்தமா புரியலே !
Post a Comment